Tuesday, December 1, 2009

பாதாள உலகத்தை கையாள விசேட பொலிஸ் பிரிவு : பொலிஸ் மாஅதிபர்

பாதாள உலக குழுத் தலைவர்களையும் போதைப்பொருள் கடத்துவோரையும் இல்லாததொழிக்கும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் விசேட பொலிஸ் பிரிவொன்றை நியமித்திருப்பதாக பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘மத்தட்ட தித்த’ செயற்திட்டத்தை விரிவான முறையில் முன்னெடுப்பதற்காக குற்றவாளி எவ்வாறான தரத்தில் எப்பேர்பட்ட பதவியிலிருப்பினும் அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் மாஅதிபர் கூறினார். பொலிஸ் தலைமையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாதாள உலக குழுத் தலைவர்கள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளர்களை கைது செய்வதற்காக எமது பொலிஸார் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். குற்றவாளிகள் சில சமயங்களில் கடமையிலிருக்கும் பொலிஸாரை கொலை செய்யவும் முயற்சிக்கின்றனர். அப்படியானதொரு சூழ்நிலையில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com