Thursday, December 10, 2009

ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது: பரிசுத் தொகை ரூ.7 கோடியை அறக்கட்டளைக்கு தானம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 18 காரட் தங்கத்தால் ஆன நோபல் பரிசு பதக்கம், ஒரு பட்டயம், 7 கோடி ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை நார்வே நோபல் பரிசு கமிட்டித் தலைவர் தோர்போஜர்ன் ஒபாமாவுக்கு வழங்கினார். காசோலையை பெற்றுக் கொண்ட ஒபாமா அந்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்குவதாக அறிவித்தார். பின்னர் ஒபாமா பேசியபோது, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் பயங்கரவாதத்துக்கு எதிராக தான் நடத்தி வரும் போரை நியாயப்படுத்தி பேசினார். பயங்கரவாதிகளின் வன்முறையில் இருந்து மக்களைக் காப்பாற்றவேண்டும் என்றால் சில நேரங்களில் போரினால் தான் முடியும் என்று கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com