Friday, December 11, 2009

இந்திய காவல்படை கொமாண்டோ வீரர்கள் 2 பேரை இலங்கை மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர்.

கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை தயார் நிலையில்.
இந்திய கடற்பரப்பினுள் 7 படகுகள் அத்துமீறி மீன்பிடித்துக்கொண்டிருந்ததை அவதானித்த இந்தியக் கடலோர காவற்படையினர் அப்படகுகளைக் கைப்பற்றிதுடன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்துச் சென்றனர். அவ்வாறு படகுகளில் அழைத்துச் செல்லும் போது ஒவ்வொரு படகிலும் 2 இந்திய காவற்படையின் விசேட கொமாண்டோக்கள் பயணம் செய்தனர். படகுகளில் ஒன்றில் பயணம் செய்த இரு கொமாண்டோக்களின் ஆயுதங்களைப் பறித்த மீனவர்கள் கொமாண்டோக்களையும் கடத்திக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

குறிப்பிட்ட கடத்தல்காரர்களை கைது செய்யும் பொருட்டு கடற்படையினர் செயலில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் நியோமல் பெரேரா, கைது செய்யப்பட்ட இலங்கையர்களை அழைத்துவரவும், கடத்தப்பட்டுள்ள இந்திய அதிகாரிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com