Thursday, December 3, 2009

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜே.வி.பி - பொன்சேகா முரண்பாடு’

13வது திருத்தச் சட்டத்துக்கு மேலாக செல்வதாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா கூறுகிறார். அதேநேரம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாதென ஜே. வி.பி கூறுகிறது. இந்த நிலையில் ஜே. வி.பி- பொன்சேகா கூட்டு எப்படி இருக்கப் போகிறதென தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வி எழுப்பினார்.

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜே. வி. பிக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பாரிய கொள்கை முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், இவர்களது தேர்தல் கூட்டு எவ்வாறு சாத்தியமாகுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவுக்கும் ஜே. வி.பி. உட்பட கூட்டு கட்சிகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படும் நிலையில் நாட்டினதும், மக்களினதும் நலனை கருத்திற்கொண்டு எவ்வாறு ஒரு சிறந்த பொருளாதார கொள்கையை முன்வைக்க முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com