Monday, November 30, 2009

குதிரைக் கஜேந்திரன் நாடு திருப்பியுள்ளார்.

வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்று மொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நாடு திரும்பியுள்ளார்.

இவர் வடக்கில் உள்ள படைவீரர்களுக்காக 40 ஆயிரம் சவப்பெட்டிகளை அரசு தயார்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டுமென பாராளுமன்றில் பேசியதையடுத்து பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார் என்பது யாவரும் அறிந்தது.

ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் முன்பு நாடு திரும்பியிருந்தமை தெரிந்ததே.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ். ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் வெளிநாட்டில் (லண்டன்) தங்கியிருக்கின்றார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com