Monday, November 30, 2009

ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது.

செயலுக்கு தயாராகுங்கள் (‘get ready for the SF mission’) என்ற வாசகங்களுடன் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து மொனராகல பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிய இருவரை பொலிஸார் கைது செய்து விடுதலை செய்துள்ளனர்.

கைது தொடர்பாக ஜேவிபி விடுத்துள்ள அறிக்கையில் கைது செய்யப்பட்ட இருவரும் தமது கட்சி ஆதரவாளர்கள் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரப்பதென்ற கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ள தமது ஆதரவாளர்கள் ஜெனரலுக்கு ஆதரவான பிரச்சாரங்கள் முன்னெடுக்கும்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதே நேரம் கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் அரசிற்கு எதிரான வாசகங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com