Friday, November 27, 2009

ஜேர்மன் பிரஜையின் சடலம் ஹோட்டல் அறையில் மீட்பு.

கொழும்பு புறநகர்ப் பகுதியான வாதுவ எனுமிடத்தில் அமைந்துள்ள சித்தாலேப ஹோட்டலில் தங்கியிருந்து ஜேர்மன் பிரஜையான Mr. Otto Raus Pieter Genesin என்பவர் தனது அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை காலை அறையை சுத்தம் செய்ய சென்ற ஹோட்டல் சிப்பந்தி அவரது உடலை கண்டதுடன் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் மரண பரிசோதனை முடிந்தவுடன் ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com