Sunday, November 29, 2009

பு​லி​களை ஆத​ரிப்​போர் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்: நாரா​ய​ண​சாமி


விடு​த​லைப் புலி​களை ஆத​ரிப்​போர் மீது தமி​ழக,​ புதுச்​சேரி அர​சு​கள் கடும் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்று மத்​திய திட்​டத் துறை இணை​ய​மைச்​சர் வி.நாரா​ய​ண​சாமி வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.

இ​து​கு​றித்து புதுச்​சே​ரி​யில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் அவர் ஞாயிற்​றுக்​கி​ழமை கூறி​யது:​

இந்​தி​யா​வில் தடை செய்​யப்​பட்ட விடு​த​லைப் புலி​கள் இயக்​கத்தை ஆத​ரித்து தமி​ழ​கத்​தி​லும்,​புதுச்​சே​ரி​யி​லுóம் ஒரு சில அர​சி​யல்​வா​தி​க​ளும் ஒரு சில அமைப்​பி​ன​ரும் பேசி வரு​கின்​ற​னர். பல முறை கைது செய்​யப்​பட்டு நட​வ​டிக்கை எடுத்​தப் பிற​கும் தொடர்ந்து வைகோ விடு​த​லைப் புலி​களை ஆத​ரித்து வரு​கி​றார். தடை செய்​யப்​பட்ட இயக்​கத்​துக்கு ஆத​ர​வாக யார் செயல்​பட்​டா​லும் அவர்​கள் தண்​டிக்​கப்​பட வேண்​டும்.

அ​வர்​கள் தேச விரோ​தி​கள். எனவே,​ அவர்​கள் மீது தமி​ழக,​ புதுச்​சேரி அர​சு​கள் கடு​மை​யான நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். தமி​ழ​கத்​தில் காங்​கி​ரஸ் தலை​வர்​க​ளில் ஒரு​வ​ரான இளங்கோவன் வீடு மீது ஒரு கும்​பல் தாக்​கு​தல் நடத்​தி​யுள்​ளது. இ​து​தொ​டர்​பா​க

த​மி​ழக முதல்​வர் நட​வ​டிக்கை எடுத்து,​ அவர்​களை கைது ​செய்​துள்​ளார். அதை நாங்​கள் வர​வேற்​கி​றோம். அதே நேரத்​தில் தடை செய்​யப்​பட்ட இயக்​கங்​களை ஆத​ரிப்​போர் மீது தேச விரோத சட்​டம் பாய வேண்​டும் என்​றார் நாரா​ய​ண​சாமி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com