Monday, November 30, 2009

மூன்று கடற்படையினர் கைது.

திருமலையில் மீனவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக மூன்று கடற்படையினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட குறிப்பிட்ட மீனவர் காணமல் போவதற்கு முன்னர் கடற்படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திருமலை கொட்பே மீனவர் துறைமுகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞனுக்கும் கடற்படையினருக்கும் எதுவித தொடர்பும் இல்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் தெரிவித்துள்ளார்.

குடிபோதையிலிருந்த மேற்படி சிங்கள இளைஞனை அன்றைய தினம் துறைமுகத்தில் கடமையிலிருந்த கடற்படை வீரரே கடத்திக் கொலைசெய்ததாக மீனவ சமூகத்தினால் முன்வைக்கப்படும் கூற்றை மறுக்கும் கடற்படைப் பேச்சாளர் கொலைக்கும் கடற்படையினருக்கும் எவ்வித தொடர்புமில்லையென கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com