Sunday, November 29, 2009

அன்னப்புறவை சின்னத்தில் சரத் பொன்சேகா.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் அன்னப்புறவை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் பேச ஆரம்பித்த ஜெனரல் சரத் பொன்சேகா, நீங்கள் பல வாரங்களாக கேட்ட கேள்விகளுக்கு இன்று பதிலளிக்கின்றேன். ஆம் நான் அரசியலில் நுழைகின்றேன். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றேன் என்றார். அங்கு பலத்த கரகோஷங்கள் கிளம்பின.

தொடர்ந்து அங்கு பேசிய அவர், நாட்டில் இடம்பெறுகின்ற குடும்ப அரசியல் நிலைமை தன்னை அரசியலுக்குள் இழுத்துள்ளதாகவும், போர்வெற்றியானது படைவீரர்ளுக்கு முற்றிலும் உரித்தானது எனவும், இதில் அரசியல்வாதிகளின் பங்களிப்பு சிறிதளவே எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அன்னப்பறவை தனது சின்னம் என அறிவித்துள்ளதுடன் கட்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com