Sunday, November 29, 2009

திஸநாயகத்தை விடுதலை செய்யக்கோரி ஒபாமா மஹிந்தவிற்கு கடிதம்.

தமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சிறீலங்கா அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக கூறி கைது செய்யபட்டு நீண்ட நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த திஸ்ஸநாயகம், அண்மையில் நீதிமன்ற தீர்ப்பின் படி இருபது ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை பெற்றார்.

அலறி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்தவிடம் இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது, திஸ்ஸநாயகம் நீதிமன்றினால் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக எதாவது மாற்று நடவடிக்கைகள் எடுக்க முடியுமா பரிசீலிக்குமாறு தான் சட்ட மா அதிபருக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தான் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com