Sunday, November 29, 2009

மஹிந்தவிற்கு அதரவு இல்லை என்கின்றார் ரிஎம்விபி யின் பொது செயலாளர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தமது கட்சி ஆதரவு பிரச்சாரங்களை மேற்கொள்ளாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் எட்வின்சில்வா கைலாசராஜா அவர்தெரிவித்துள்ளார்.

சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த , இவ்விடயம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு லேக் வீதியில் உள்ள தமது கட்சி தலைமைப் பீடத்தில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் கூடி மூன்றிற்கு மேற்பட்ட மணித்தியாலயங்கள் கலந்துரையாடியதன் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 15 உயர் மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் 13 பேர் இம்முடிவினை ஆதரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் பிள்ளையான் அததெரணவிற்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com