Friday, November 27, 2009

கனடாவில் உள்ள பௌத்த விகாரை மீண்டும் தீக்கிரையானது.

கனடா ஸ்காப்றோ வில் உள்ள பௌத்தவிகாரை மீண்டும் 2 வது தடவையாக தீ மூட்டப்பட்டுள்ளது. இவ்வருடம் வன்னியில் புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்டபோது தீக்கிரையான குறிப்பிட்ட விகாரை நேற்றிரவு கனடிய நேரம் 1.30 மணியளவில் மீண்டும் தீ மூட்டப்பட்டபோது கனடிய பொலிஸார் மற்றும் தீயணைக்கும் படையினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விகாரையின் பிரதம பிக்கு சங்கைக்குரிய அகங்கம ரத்னசிற தேரர், இரவு 1.30 மணியளவில் தான் சத்தம் ஒன்றை கேட்டதாகவும் அதைதொடர்ந்து புகை கிளம்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொது வாகனப்போக்குவரத்து சேவை ஒன்றின் சாரதி ஒருவர் தமக்கு தகவல் தந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இச் செயலானது மாவீரர் தின நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com