Saturday, November 28, 2009

ஐக்கிய தேசியக் கட்சியினுள்ளும் முறுகல். இருவர் மீது நடவடிக்கை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பூரண ஆதரவு வழங்குவதென்ற முடிவை அக்கட்சியில் உள்ள 96 நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களில் மூவர் முற்றாக எதிர்த்துள்ளனர். இந்திக்க பண்டாரநாயக்க, ஜோன்சன் பெர்ணான்டோ, அசாத் சல்லி ஆகியோரே கட்சியின் தீர்மானத்துடன் முரண்பட்டுள்ளவர்களாகும்.

இதன் விளைவாக ஜோன்சன் பெர்ணான்டோ ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் அசாத் சாலி கட்சியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்ணான்டோ, தான் சுயமாக கட்சியின் பதவிகளை இராஜனாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரம் கட்சியின் தீர்மானங்களுக்கு கட்டுப்பாடாதவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலை கருத்தில் கொள்ளப்படாது எனவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com