Monday, November 30, 2009

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – தி எல்டர்ஸ் குழு

ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்டுள்ள தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களுள் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலர் கோஃபி அன்னான், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்தி அஹ்திஸாரி, அமெரிக்க அதிபரான் ஜிம்மி கார்ட்டர், பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொண்டது இந்த எல்டர் அமைப்பு.

இலங்கையில் போரில் வெற்றி பெற்றவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பேராயர் டூட்டு தமிழோசையிடம் தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com