Friday, September 4, 2009

கடத்தல்காரர்களை பிரதேசவாசிகளும் மாணவர்களும் சுற்றிவளைத்தனர்.

மாலம்பே தகவல் தொழில் நுட்பக்கல்லூரி மணவன் ஒருவனை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேசவாசிகளாலும் கல்லூரி மாணவர்களாலும் முறியடிக்கப்பட்டுள்ளது. மாலம்ப தகவல் தொழில்நுட்பக் கல்லூரி பிரதான நுழைவாயில் அருகிற்கு நேற்று முன்தினம் சென்ற குழுவொன்று மாணவன் ஒருவனை இழுத்துச் சென்று தாம் வந்திருந்த ஜீப் வண்டியில் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகளும் மாணவர்களும் ஜீப் வண்டியை சுற்றிவளைத்து கடத்தல்காரர்களை தடுத்துள்ளனர்.

அப்போது அங்கு விரைந்த பொலிஸார் கடத்தல்காரர்கள் மீது பொதுமக்கள் மேற்கொள்ள முயன்றதாக்குதலைத் தடுத்து நிறுத்தி அவர்களை குறிப்பிட்ட வண்டியுடன் மாலம்ப பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட ஜீப்வண்டி பொலிஸ் நிலையத்தினுள் காணப்பட்டதாக அங்கு செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் மாலம்ப பொலிஸ் அதிகாரிகளிடம் வினவியபோது, எவ்வித தகவல்களும் ஊடகங்களுக்கு வழங்கப்படமாட்டாது என தெரிவித்த பொலிஸார், தகவல்களை பொலிஸ் ஊடகப்பிரிவில் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்ததாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment