Wednesday, September 2, 2009

இரு யுவதிகளின் மர்மக்கொலை தொடர்பாக இரண்டாவது சந்தேக நபர் கைது.

கொழும்பில் வீட்டுவேலைக்கு அமர்த்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இரு யுவதிகளின் மரணம் தொடர்பாக இரண்டாவது சந்தேக நபரை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். ஹற்றன் பிரதேசத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இரு வயது குறைந்த யுவதிகளையும் கொழும்புக்கு அழைத்துவந்து குறிப்பிட்ட வீட்டில் வேலைக்கு அமர்த்திய நபரே இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பௌத்தாலோக மாவத்தையில் உள்ள கால்வாய் ஒன்றினுள் கடந்த மாதம் சடலமாக மீட்கப்பட்டிருந்த இவ்விரு யுவதிகளையும் வீட்டில் வேலைக்கு வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment