Sunday, September 6, 2009

பிரதமர் ரத்தனசிறி விக்கரமாநாயக்கவின் கைவிரல் அடையாளம் பெறப்பட்டது.

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்ற இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவருடைய கைவிரல் அடையாளம் பெறப்பட்டுள்ளது. சாதாரணமாக ராஜதந்திர விஜயம் ஒன்றை மேற்கொண்டு மிக விசேட அதிதிகளுக்கான (VIP lounge) பாதையில் இல் செல்லும் நாட்டின் தலைவர்கள் இவ்வாறு சாதாரண பயணிகள்போல் நாடத்தப்படுவதில்லை.

இவ்விடயம் தொடர்பாக ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஜப்பான் அரச உயர் மட்டத்தினரிடம் முறையிட உள்ளதாக தெரியவருகின்றது. எது எவ்வாறாயினும் அவருடைய கைவிரல் அடையாளம் எடுக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

No comments:

Post a Comment