Wednesday, September 2, 2009

லங்கா இரிதா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் கைது.

மாத்தறை தெனியாய பிரதேசத்திற்கு செய்தி சேகரிக்கச்சென்ற லங்கா இரிதா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சாலிக விமலசேன, ரவீந்திர புஸ்பகுமார, தயா தென்னக்கோண் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இக் கைது தொடர்பாக, பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ் தோட்டம் ஒன்றினுள் நுழைந்த ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment