Tuesday, September 1, 2009

தமிழ்செல்வனின் உதவியாளர்களின் ஒருவரான பெண் புலி கைது.

புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் உதவியாளர்களில் ஒருவரான பெண் புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றிருந்த நிலையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தனது கணவர் புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிர் இழந்ததாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment