Friday, September 4, 2009

இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதி ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற தமிழ் அகதி ஒருவரை தனுஸ்கோடி கரையோரப்பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ் மாவட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய சிவகுமார் எனப்படும் மேற்படி நபர் இந்தியா செல்வதற்காக பெரி ஓட்டுனர் ஒருவருக்கு 40000 ரூபாய்க்களைக் கொடுத்துள்ளார். பெரி ஓட்டுனர் அவரை தனுஸ்கோடி கடற்கரை அருகே இறக்கி விட்டுச்சென்றதை அவதானித்த இந்திய மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த 16 தமிழ் இளைஞர் யுவதிகளை புலிகள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசேட முகாம் ஒன்றில் வைத்து விசாரணை செய்துவந்த இந்தியப் பொலிஸார் அவர்கள் பொது மக்கள் என்பதை உறுதி செய்து அவர்களை மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment