Wednesday, September 2, 2009

குண்டு வெடிப்பில் சிறுவன் ஒருவன் மரணம், இருவர் காயம்.

நேற்றுமாலை அச்சுவேலிப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களால் கண்டெடுக்கப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில், ஒரு சிறுவன் மரணமடைந்தும், மற்றய இருவர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 9 வயதுச் சிறுமியும், 7 வயதுச் சிறுவனும் சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி கருத்துத் தெருவித்த பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிமால் மெதிவெக்க, இக்குண்டு வெடிப்பில் மரணமடைந்த சிறுவன் நிவாகரன் (11 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வெடித்த குண்டின் தன்மையை பொலிஸார் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment