Sunday, September 6, 2009

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவல்

காஷ்மீரில் லடாக் பிராந்தியத்தில் 22 ஆயிரத்து 420 அடி உயர மவுண்ட் கயா என்ற குன்று உள்ளது. அது, காஷ்மீரின் லடாக்கும், இமாசலபிரதேசத்தின் ஸ்பிடியும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லை, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வரையறுக்கப்பட்டது. இதையே சர்வதேச எல்லையாக இந்தியாவும், சீனாவும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், மவுண்ட் கயா அருகே இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் 1 1/2 கி.மீ. தூரம் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள பாறைகளில் சிவப்பு நிற பெயிண்டால் `சீனா' என்று திரும்பும் திசையெங்கும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment