Monday, August 31, 2009

நோர்வேயில் தமிழ் குழுக்கள் மோதல்.

நோர்வேயில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட இரு தமிழ் குழக்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. அங்கு சென்றிருந்த புளொட் மற்றும் புலி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கருத்துமுரன்பாடு கைகலப்பில் முடிந்துள்ளது.

அங்கு இடம்பெற்ற கைகலப்பில் புளொட் அமைப்பைச் சேர்ந்த பாபுஜீ மற்றும் கழக உறுப்பினர்கள் சிலர் பாதிக்ககப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன் இவர்கள் மீது நோர்வேயில் தெரிச்சண்டியன் என அறியப்படும் ஜீவா என்பவர் தலமையிலான குழுவொன்று தாக்குதல் நாடாத்தியதாக தெரியவந்துள்ளது.

புலிகள் முற்றாக அழிக்ப்பட்டுள்ள நிலையிலும் முன்னாள் ஆயுததாரிகள் கலந்து கொள்ளும் பொது நிகழ்வுகளில் இவ்வாறான வேண்டத்தகாத செயல்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் பெரிதும் விசனம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment