Saturday, September 5, 2009

மேலும் 3500 பொலிஸார்.

பொலிஸ் திணைக்களத்தில் மேலும் 3500 பொலிஸாரை இணைத்துக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேற்படி வெற்றிடங்களுக்காக 15000 விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதுடன் இவர்களில் 230 உதவிப் பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது நபர்களின் பின்புலம் மற்றும் அவர்களது வரலாற்றுப் பதிவுகள் தொடர்பாக மிகவும் அவதானம் செலுத்துமாறு ஆட்சேர்பு திணைக்களத்தினைரை பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவ்வாறு தகுதியற்றவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்டு பல்வேறு அவப்பெயர்களை திணைக்களத்திற்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment