Tuesday, September 1, 2009

வாஸின் மனைவி மகன் உட்பட சந்தேக நபர்கள் 14 பேரும் தொடர்ந்தும் விளக்க மறியல்.

தகவல் தொழில்நுட்ப்பக்கல்லூரி மாணவன் நிபுண ராமனாயக்க தாக்கப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுத்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி , மகன் மற்றும் 12 பேரையும் எதிர்வரும் 15 செப்டம்பர் வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் சந்தேச நபர்களை பிணையில் விடுவிக்குமாறு பிணைமனுத்தாக்கல் செய்தபோது, அவர்களுக்கான பிணையை உயர்நீதீமன்றிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என மஜிஸ்திரேட் நீதிமன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் வாஸின் மகன் மற்றும் நான்கு பொலிஸ்காரர்கள் தாக்கப்பட்ட மாணவனால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment