பல்கலைக்கழக உள்வாரி மாணவர்கள் ஒன்றியத்தைச் சேர்த்த இரு மாணவர்கள் நேற்று இரவு கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதிக்கு எதிரான பிரச்சாரங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள றுகுனு பல்கலைக்கழக மாணவ தலைவன் சஞ்ஜீவ மகேஸ் குமார, மாணவர்களுக்கு எதிரான இவ் நடவடிக்கையை அரசு பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டுள்தாகவும், தவணைப் பரீட்சைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை எதிர்த்து அனைத்து பல்கலைகழகங்களும் இணைந்து ஆர்பாட்டம் ஒன்றை நாடாத்த ஏற்பாடாகியிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. ஆனால் முறைகேடுகளுக்கு எதிரா குரல் கொடுக்க முனையும் போது அதை அரசு அரசுக்கு எதிரான புரட்சி என முத்திரை குத்த முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment