Monday, August 3, 2009

பௌத்தசாசன அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் மான் இறைச்சி கடத்திய ஐவர் கைது.

வான் ஒன்றில் மான் இறைச்சியை எடுத்துச் சென்ற ஐவரை உடவளவ தேசிய வன பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் பௌத்த சாசன அமைச்சின் அலுவலர்கள் எனவும் அவர்களில் ஒருவர் அவ் அமைச்சின் உயர் அதிகாரி என்பதுடன் மேற்படி சட்டவிரோத இறைச்சி கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் அமைச்சினுடையது எனவும் தெரியவந்துள்ளது.

உடவளவ வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையில் உள்ள தனமல்வில வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி ஐவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின்போது கைப்பற்றப்பட்ட இறைச்சி உடவளவ வன சரணாலயத்தில் உள்ள மான் ஒன்றை கொன்று பெறப்பட்டதாக வெளிவந்துள்ளது.

வனவிலங்குகளை கொல்வது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாக உள்ள நிலையில் பொறுப்பு மிக்க அமைச்சொன்றின் அதிகாரிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment