Wednesday, August 5, 2009

பாதாளக்குழுக்களைச் சேர்ந்த மேலும் இருவர் சுட்டுக்கொலை.

பாதாளக்குழுக்களைச் சேர்ந்த மேலும் இரு முக்கிய புள்ளிகள் இரு வேறு இடங்களில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாப்பா என்று அழைக்கப்படும் மொஹமட் றிவான் எனும் நபர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை ரத்மலானை பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளின் போது ஆயுதங்கள் மறைத்து வைத்திருக்கும் இடம் ஒன்றை காண்பிப்பதாக ரத்மலானைப் பிரதேசத்திற்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற பாப்பா அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதமொன்றை எடுத்து பொலிஸார் மீது தாக்குதல் நாடாத்த முற்பட்டபோது தாம் திருப்பித் தாக்கியதில் பாப்பா உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த நபர் நேவி றொசான் எனவும் மாடிவில எனுமிடத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் அவர் உயிரிழந்தாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment