Friday, August 21, 2009

மேற்குலகம் புலிகளையும் சொத்துக்களையும் எம்மிடம் ஒப்படைக்கவேண்டும்.

புலிகளில் மூத்த உறுப்பினர்களில் ஓருவரும் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவருமான கே.பி யின் கைது இடம்பெற்று ஒரு வாரகாலத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச புதியதோர் சவாலை சர்வதேச சமூகத்திற்கு விடுத்திருக்கின்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மேற்குலகத்திடம் நேர்மையும் ஆர்வமும் உண்டானால், உலகிலே மிகப்பயங்கரமான பயங்கரவாத இயக்கமாக விளங்கிய புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள சில புலிகளையும் அவர்களது சொத்துக்களையும், அந்நாடுகள் எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என லண்டன் பிபிசி க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புலிகளின் சர்வதேச வியாபாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், புலிகள் பலசரக்கு கடைகள் முதல் வீடு காணி விற்பனைகளிலும், பெற்றோல் நிலையங்கள் முதல் ஆலயங்கள் வரைக்கும், சர்வதேச கப்பல் கம்பனிகள் முதல் சினிமா படங்கள் வரைக்கும் முதலீடு செய்துள்ளனர். கே.பி யின் தகவல்களின் அடிப்படையில் அவற்றின் பெறுமதி 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மதிப்பிடப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment