Sunday, August 30, 2009

பாகிஸ்தான் தயாரித்த புதிய ஏவுகணையால் இந்தியாவுக்கு ஆபத்து

கடந்த 1985 மற்றும் 1988-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ரீகன் இருந்தபோது, பாகிஸ்தானுக்கு "ஹார்போன்" ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியது. மொத்தம் 165 ஏவுகணைகள் கொடுக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தான் நவீனமாக மாற்றி அமைத்து புதிய ஏவுகணையை தயாரித்துள்ளது. இதுபோல, பி-3 சி என்ற போர் விமானங்களையும் ரீகன் அரசு வழங்கியது. இவற்றையும் பாகிஸ்தான் மாற்றி அமைத்து இருக்கிறது. இந்த போர் விமானங்கள், வானத்தில் இருந்து தரையில் இருக்கும் குறியீட்டை மிகவும் சரியாக தாக்க கூடியது. இந்த போர் தளவாடங்கள் இரண்டிலும், மாற்றங்கள் செய்து இருக்கும் பாகிஸ்தானுக்கு, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்த கூடும் என்ற அச்சத்தையும், ஒபாமா வெளியிட்டு இருக்கிறார்.


No comments:

Post a Comment