Monday, August 3, 2009

அமைச்சர் பியசிறி விஜயநாயக்க விற்கு எதிராக கொலைவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடைபெற்ற மேல்மாகாண சபைத்தேர்தலின் ஜேவிபி யின் பிரதான வேட்பாளரான நந்தன பாலகே கொலை வழக்கு வெயாங்கொட பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் கொலைக் குற்றவாளிகளாக கலாச்சார அலுவல்கள் அமைச்சர் பியசிறி விஜயநாயக்க உட்பட பலர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளவர்களில் கிங்ஸ்லி கஸ்தூரியாராச்சி (மேல்மாகாண சபைத் தேர்தலின் ஐ.ம.சு.மு வேட்பாளர்), நெலும் மல்லவ ( மேல்மாகாண சபை உறுப்பினர்), ஆனந்த அசோக குமார (விமல் வீரவன்சவின் மைத்துனர்), ஆகியோரும் அடங்குகின்றனர்.

No comments:

Post a Comment