Wednesday, August 19, 2009

மலேசியா அருகே நடுக்கடலில் கப்பல்கள் மோதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள அபுதாபியில் இருந்து 58 ஆயிரம் டன் நாப்தா ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் ஒன்று மலேசியா அருகே வந்த போது இன்னொரு சரக்கு கப்பல் மீது மோதியது. இதை தொடர்ந்து அந்த கப்பலில் தீ பிடித்து கொண்டது. இருந்தபோதிலும் கடலில் நாப்தா கலக்கவில்லை. அந்த கடல் வழியில் கப்பல்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த கப்பலில் 25 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 9 பேர் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment