Wednesday, August 12, 2009

விடுதலைப் புலிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க இலங்கை கோரிக்கை

விடுதலைப் புலிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கி அந்த பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு சுமார் 10 நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐயன்னா குரூப் என்று புலிகளின் நிறுவனம் மற்றும் பத்மநாதன் பெயரில் பல நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், கணிசமான பணம் சுவிட்சர்லாந்து மற்றும் மொரிசியஸில் உள்ள கணக்குகளில் உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்த விபரங்களை சமீபத்தில் கைது செய்யப்பட்ட பத்மநாதன் தெரிவித்துள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com