Monday, August 3, 2009

இந்து ஆலயம் அருகில் மதுச்சாலை அமைக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்.

மஸ்கெலிய பிரதேசத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் அருகில் மதுச்சாலை ஒன்று அமைக்கப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களும், பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். மஸ்கெலிய நகரில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிவசுப்ரமணிய ஆலயத்தின் அருகிலேயே மேற்படி மதுச்சாலை நிறுப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தின் முன் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன், குறிப்பிட்ட மதுச்சாலை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படாதவிடத்து தாம் தமது போராட்டத்தை பல வழிகளிலும் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment