Saturday, August 8, 2009

நியாயமான தேர்தல் ஒன்றை நாடாத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் அதீத முயற்சி. சித்தார்த்தன்.

வவுனியா உள்ளுராட்சி மன்றத்திற்கான 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு 18 வாக்கெடுப்பு நிலையங்களில் இடம்பெற்று முடிந்துள்ள தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், தேர்தலை மிகவும் சிறந்த முறையிலும் ஊழல்கள் அற்றதாகவும் நடாத்தி முடிக்க தேர்தல் ஆணையாளர் அதீத முயற்சி எடுத்திருந்தாகவும், அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் கட்சிகளான ஈபிடிபி, சிறிரெலோ, ஈரோஸ் ஆகிய கட்சிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளது பாதுகாப்பு உத்தியோகித்தர்களை தவறான முறையில் பயன்படுத்தி தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத பல செயல்களில் இறங்கியிருந்தாகவும் தெரிவித்தார்.

வவுனியா தேர்தல்கள் கடந்த காலங்களைப்போல் உயிர் இழப்புகள் எதுவும் இல்லாமல் நடந்தேறியுள்ளதுடன், வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகி உள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment