Tuesday, August 4, 2009

வடக்கு தேர்தல் பிரதேசங்களுக்கு பத்திரிகையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக அரசிடம் இன்னும் முடிவில்லை.

வடக்கு தேர்தல் நிலவரங்கள் தொடர்பான செய்தி சேகரிக்கச் செல்ல விரும்பும் பத்திரிகையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எதனையும் கொண்டிருக்கவில்லை என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மற்றும் வவுனியா தேர்தல் நிலவரங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்வதற்கு உள்ளுர் செய்தியாளர்கள் எவரும் இதுவரை அனுமதி கோரி தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வில்லை. ஆனால் சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளது. அவை தொடர்பான இறுதி முடிவு மிகவிரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment