Thursday, August 6, 2009

ஆசிரியையை ஊர்வலமாக அழைத்துச் சென்ற கூட்டமைப்பு பா.உ கிசோர்.

தனது மகள் கல்வி பயிலும் றம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியை ஒருவரை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் அவர்கள் வீதிவலமாக அழைத்துச் சென்ற சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பாடசாலையில் கல்வி பயிலும் கிசோரது மகள் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாகவும், அவ்வாறு அவர் காணாமல் போனதற்கு குறிப்பிட்ட ஆசிரியையும் உடந்தையாக இருந்ததாக ஆத்திரமடைந்த பா.உ, மகள் பாடசாலைக்கு வரும்போது அணிந்து வந்திருந்த பாடசாலைச் சீருடையை மறைத்துவைத்துச் சென்றுள்ள இடத்தை காண்பிக்குமாறு ஆசிரியையை ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

குற்றம் ஒன்று இழைக்கின்றவர்களுக்கு தண்டனை அளிக்க நீதிமன்றம் இருக்கின்றபோது சட்டத்தை பலவந்தமாக தமது கைகளில் எடுத்திருந்த புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கிசோர் அவர்கள், புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை தனது கையில் எடுத்துள்ளதாக இவ்விடயம் தொடர்பாக இலங்கைநெற் இற்கு கருத்து தெரிவித்த வவுனியா பிரதேசவாசி ஒருவர் கூறினார்.


No comments:

Post a Comment