Wednesday, August 5, 2009

தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட ஈரோஸ் குழுவினர் விசாரணையின் பின் விடுதலை.

வவுனியா தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மீது தாக்குதல் நடாத்திய ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்தோர் பொலிஸ் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் குருமன்காடு பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment