Thursday, August 20, 2009

எஸ்.எஸ்.பி வாஸின் மனைவி கைது.

தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி கைது செய்யப்பட்டு பொலிஸ் தலைமையகத்தில் வைத்து குடையப்படுவதாக பொலிஸ் பேச்சாளார் தெரிவித்துள்ளதுடன் அவர் இன்று பிற்பகலுக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட நிபுண ராமநாயக்கவை பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் வைத்து பொலிஸ் அதிகாரியின் மகன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் தாக்கியதாகவும், ஒரு தாயிடம் இருந்து கேட்கக்கூடாத வார்த்தைப் பிரயோகங்களை தான் பொலிஸ் அதிகாரியின் மனைவியிடம் கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment