Wednesday, August 12, 2009

வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களே கே.பி க்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

புலிகளின் தலைவர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டிருந்த கேபி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு மிகவும் பிரபல்யமான வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களே பாதுகாப்பு வழங்கியுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. சிஐஏ எனப்படும் Central Intelligence Service of the USA, எஸ்ஐஎஸ் எனப்படும் The Secret Intelligence Service (often known as MI-6) of the UK, என்ஐஎஸ் எனப்படும் Norwegian Intelligence Service போன்ற புலனாய்வு நிறுவனங்கள் கேபி யின் இருப்பிடத்தை துல்லிமாக அறிந்து வைத்திருந்தமை புலனாகியுள்ளது.

சர்வதேச பொலிஸார், இலங்கை, இந்திய அரசுகளால் தேடப்பட்டு வந்த கேபியின் அசைவுகளை அறிந்து வைத்திருந்த மேற்படி ஸ்தாபனங்கள் அவரை கைது செய்வதற்கோ அன்றில் அவர் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கவோ தவறியுள்ளதுடன் கொழும்பில் உள்ள பிறநாட்டு தூதுவர் ஒருவர் கேபியை மலேசியாவில் வைத்து சந்தித்தமையும் வெளிவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com