Tuesday, August 18, 2009

கிழக்கு ஆளுநரை நீக்ககோரி முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்.

கிழக்குமாகாண ஆளுநர் மொகான் விஜெயவிக்ரம அவர்களை அப்பதவியில் இருந்து நீக்கி சபையுடன் ஒத்துழைக்கக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் சபையின் நான்கு அமைச்சர்கள் கையொப்பம் இட்டு ஜனாதிபதிக்கு கடித்தம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் ஆளுநர் தனது கடமை எல்லைகளுக்கு அப்பால்சென்று மாகாண சபை நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், அதிகாரப்பரவலாக்கதிற்கு ஒத்துழைப்பதில்லை எனவும், மக்களால் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் நிர்வாகம் தொடர்பாக முடிவுகளை எடுக்கின்ற போது அவற்றை தட்டிக்கழிப்பதாகவும் சுட்டிக்காட்டி ஆளுநரை நீக்கி மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளுடன் ஒத்துழைக்கக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு வேண்டுப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 15 ம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment