Sunday, August 2, 2009

இந்திய வைத்தியசாலைகள் மேலும் இரு மாதங்கள் இயங்கும்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் பொருட்டு இலங்கையில் கள வைத்தியசாலைகளை அமைத்துள்ள இந்திய இராணுவத்தினர் மேலும் இருமாதங்களுக்கு தமது சேவைகளை வழங்குவர் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் வேண்டுதலின் பேரில் இருமாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய அரசு மேற்படி வைத்திய சேவையின் ஊடாக இடம்பெயர்ந்துள்ள 21000 மக்களுக்கு சேவை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் வைத்திய பரிகாரங்களின் போது துப்பாக்கி சூட்டுக்காயங்கள், எலும்பு முறிவு என்பனவற்றிற்கான வைத்தியம் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள 60 பேர் கொண்ட வைத்தியக்குழுவில் சத்திரசிகிச்சை நிபுணர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விசேட வைத்தியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களும் அடங்குகின்றனர்.

No comments:

Post a Comment