Wednesday, August 26, 2009

அமெரிக்க கிறீன் கார்ட் மோசடி. கணவனும் மனைவியும் கைது.

அமெரிக்க கிறீன் கார் லொட்டறி மூலம் அமெரிக்க நிரந்தர வதிவிடவுரிமை பெற்றுத்தருவதாக பெரும் எண்ணிக்கையான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்று ஏமாற்றியுள்ள பிரதான நபரும் அவரது மனைவியும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மோசடிப்பேர்வழி உப்பாலி ராஜபக்ச என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் இவரது இம்மோசடிகளுக்கு உதவிய நபர்கள் பலர் உள்ளதாகவும் அவர்களை தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் இம்மோசடிகளுக்காக பயன்படுத்திய பல வகையான போலி ஆவனங்கள், போலி வதிவிட அனுமதிகள், போலி வாகனசாரதிபத்திரங்கள் உட்பட பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment