Thursday, August 6, 2009

தமிழரின் தார்மீகம்...பொதுநலம்...கலாச்சாரம்.. காக்கப்படவேண்டுமாயின்....வாரீர்..வாரீர் உதயசூரியனின் பொதுநலத்துள் வாரீர்..

தாய்மண்ணை நேசிக்கும் எம்மக்கள்
தமிழை சுவாசிக்கும் எம்மக்கள்
தன்னலமில்லா எம்மக்கள்
தனித்துவமான எம்மக்கள்

சுமைகளை சுமந்த எம்மக்கள்
சுயநலமறியாத எம்மக்கள்
சுகமான சுமைகளை தாங்கும் எம்மக்கள்
சுவடுகளை தடவிதழும்பு பார்த்த எம்மக்கள்

துயர்களை தீபத்தினுள் ஏற்றிய எம்மக்கள்
துஷ்டரை தூரவோ கலைத்த எம்மக்கள்
துயரப்பட்ட மக்களுக்காகவே எம்மக்கள்
தூயநீரை குடிக்க மறுத்த நம்மக்கள்

புகழை துறந்து நடை தளர்ந்த நம்மக்கள்
புவியின் ஈர்ப்பு சக்தியை அறிந்த நம்மக்கள்
புன்னகை தனை வீசிஏறிந்த எம்மக்கள்
புகழாரம் வேண்டாத நம் மக்கள்

மக்களை மதிப்பவர் யாரென்று அறிந்த எம்மக்கள்
மறவர்களை தமிழருக்காய் கொடுத்த எம்மக்கள்
மண்புமிகு மகுடம் சுமந்த எம்மக்கள்
மக்களை திசைமாற்றி கால் நடைகளாய்
மண்ணில் நடைபயில வைத்தவர் யாரென்று அறிந்த எம்மக்கள்...

அன்பான மக்களே .....
தமிழரின் காலச்சாரம்.... தார்மீகம்...
பொதுநலம் காக்கப்படவேண்டுமாயின்....வாரீர் வாரீர்
உதயசூரியனின் பொதுநலத்துள்..வாரீர்

உதயசூரியன் வந்துவிட்டால்
உதயமாகும் கண்களில் வெளிச்சம்
உழைக்கும் கரங்கள் ஒன்றுசேர்ந்து
உவமயமாயகும் மக்களின் எழிர்ச்சி
உரக்கசொல்வோம் உதயசூரியனை
உச்சரிப்போம் உச்சரிப்போம்
உறவுகளாகிய நாம்
உறுதிéண்டு உச்சரிப்போம்
உண்மைகள் வாழும் வரை....வாரீர்
உதயசூரியனை ஆதரிப்பீர்... ஆதரிப்பீர்...

அன்று தொடக்கம் இன்றுவரை ஆதரித்த உதயசூரியனை நாம் என்றும் ஆதரிப்போம்
வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் மக்கள்

கிளி-முல்லை மக்களின் அன்பான வேண்டுகோள்

No comments:

Post a Comment