Sunday, August 23, 2009

திருமலை அரச காணிகளை விற்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்.

கிழக்கு மாகாண சபையைச்சேர்ந்த சில அரசியல்வாதிகள் திருமலை உப்புவெளி கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் உள்ள காணிகளுக்கு பொய் உறுதிகளை வழங்கி அக்காணிகளை விற்றுப் பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இது வரை ஒவ்வொன்றும் 15 பேர்ச்சஸ் பரப்பளவுடை 25 காணித்துண்டுகள் அவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அப்பகுதியில் விசேட கண்காணிப்பை மேற்கொள்ளவென கடற்படையினர் காவலில் அமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment