Wednesday, August 12, 2009

முன்னாள் இராணுவத் தளபதி மரணமானார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் இணைந்த வடகிழக்கின் ஆளுனருமான நளின் செனவிரத்தின அவர்கள் இன்று காலை காலமானார். 1985ம் ஆண்டில் இருந்து 1988ம் ஆண்டுவரை இலங்கை இராணுவத்தின் 10வது இராணுவத் தளபதியாக கடமையாற்றிய அன்னாரது இறுதிக் கிரிகைகள் பூரண இராணுவ மரியாதையுடன் எதிர்வரும் 15ம் திகதி சனிக்கிழமை பொரளை, பொது மயானத்தில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1953 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் 2ம் லெப்டினட் ஆக இணைந்து கொண்டதுடன் 1988ம் ஆண்டு 35 வருடகால சேவையின் பின்னர் ஓய்வு பெற்றிருந்ததுடன் இணைந்த வடகிழக்கின் ஆளுனராகவும் கடமையாற்றி இருந்தார்.

அத்துடன் இவரது சகோதரர் அனா செனவிரத்தின என்பவர் இலங்கையின் முன்னால் பொலிஸ் மா அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment