Tuesday, August 18, 2009

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடந்த 3 மாதங்களாக இலங்கை கடற்படையினர் மீனவர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதும், வலையில் உள்ள மீன்களை கொள்ளையடிப்பதும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இதனால் மீனவர்கள் பெரும் தொழில் நஷ்டம் ஏற்பட்டதுடன், மீன்பிடிக்க செல்லவும் அச்சப்பட்டனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மீனவர்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தொழில் நஷ்டம் ஏற்பட்டு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனை கண்டித்தும், இந்திய_இலங்கை மீனவர்கள் இருநாட்டு எல்லையிலும் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையை பெற்று தந்து சுமூகமாக இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க மத்திய_மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆகஸ்ட் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது.

மேலும் இப்போராட்டத்தில் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் ஆதரவு கோரி அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவது என தீர்மானித்துள்ளனர். இப்போராட்டத்தினால் சுமார் 1 லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட உள்ளது. எனவே மத்திய_மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி தினபூமி

No comments:

Post a Comment