Wednesday, August 5, 2009

வட மாகாண வாக்காளர்கள் தேர்தலிலும் பார்க்க இடைத்தங்கல் முகாம் மக்கள் மீதே அதிக அக்கறை கொண்டுள்ளனர். பெப்ரல்


யாழ் மற்றும் வவுனியா வில் உள்ள வாக்காளர்கள் இடம்பெற இருக்கும் தேர்தலிலும் பார்க்க வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமது உறவினர்கள் மீதே மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக பெப்ரல் எனப்படும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. றொஸான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்ததாக குறிப்பிட்ட அவர், வவுனியா, யாழ் தேர்தல்களுக்கான தேர்தல் வன்முறைகள் மிக குறைவாகவே பதிவாகியுள்ளது. அதேநேரம் ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வன்முறைகள் மிக அதிகமாக காணப்படுகின்றது. அங்கு ஓர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் 85 வன்செயல்கள் பதிவாகியுள்ளது. அவற்றில் அரச உடமைகள் ஆளும் தரப்பினரால் மிதமிஞ்சி பாவிக்கப்பட்டமை, சட்டவிரோத பிரச்சார முறைகள் என்பன அதிகமாக காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment