Wednesday, August 5, 2009

வவுனியா தென்கிழக்கு பிராந்திய மக்கள் நல ஒன்றியம் தேர்தலில் புளொட் அமைப்புக்கு ஆதரவு!!

எதிர்வரும் வவுனியா நகரசபை தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரை எமது பிரதேசத்து மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று வவுனியா தென்கிழக்கு பிரதேச மக்கள் நல ஒன்றியம் ஆகிய நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்திய இராணுவம் எம்மை விட்டு விலகிய பின்னர் இன்றுவரை எமது பிரதேசம் போரின் வடுக்களை காணாமல் உள்ளது என்றால் அதற்கு பிரதான காரணம் புளொட் அமைப்பினரே.

எமது பகுதியில் இருபது வருடங்களாக சுற்றிவளைப்புகள் இல்லை. இராணுவ கெடுபிடிகள் இல்லை. படுகொலைகள் இல்லை. இறுதியில் முட்கம்பி வேலிகள் அமைத்த மனித தடுப்பு முகாம்களும் இல்லை. இத்தனைக்கும் காரணம் புளொட் அமைப்பினர் எமது மக்களுக்கு வழங்கி வந்த அரசியல் தலைமைத்துவமே. நாங்கள் சகஜ வாழ்க்கையை அனுபவித்தோம். கல்வி நடவடிக்கைகள் சீராக இயங்கின. விவசாயமும் ஏனைய தொழில்களும் தடங்கல் இன்றி தொடர்ந்தன. எமது பகுதியின் அபிவிருத்தியும் தொடர்ந்தது. அதே நேரத்தில் எமது இனத்தின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி நடாத்தபட்ட வெகுஜன ஜனநாயக போராட்டங்களிலும் நாம் எமது பங்களிப்பை செலுத்தி வந்தோம்.

புளொட் அமைப்பினர் என்றுமே தவறுகள் இளைக்காதவர்கள் என்று சொல்ல நாம் முன்வரவில்லை ஆனால் அதையும் தாண்டி அவர்கள் எமக்காக செய்த தியாகங்கள், கொண்டிருந்த அர்ப்பணிப்புகள், நல்கியிருந்த சேவைகள் என்பவைதான் எம் கண் முன்னால் தெரிகின்றன.

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்கு
என்ற கூற்றுக்கு இணங்க என்றும் எம்முடனேயே கலந்திருக்கும் புளொட் அமைப்பினரை ஆதரிப்பதே காலத்தால் எமக்கு இடப்பட்ட பணி என கருதுகிறோம். எனவே தேர்தல் நாளன்று உங்கள் வாக்குகளை தவறாமல் பயன்படுத்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் விட்ட தவறை மீண்டும் ஏற்படுத்தி, எதிர்கால அபிவிருத்தியில் எமது பிரதேசம் புறக்கணிக்கப்படாமல் இருக்க, தொலைநோக்கோடு செயற்படுவோம்.

இணையத்தளங்களில் வலம்வரும் நீங்களும் எமது பிரதேசத்தவர்களனால் உங்கள் வீட்டார் அயலவர்கள் உறவினர்களுட ன் எமது தீர்மானத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

செயற்குழு -
வவுனியா தென்கிழக்கு பிரதேச நல ஒன்றியம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com